ஆழ்கடல் அதிசயங்கள்

Format: Print

Publisher: தமிழ் திசை

பசிபிக் மத்தி மீன்கள் பெருங்கூட்டமாகவே வலசை போகின்றன. அந்தக் கூட்டம் சுமார் 7 கி.மீ. நீளமும் 1.5 கி.மீ. அகலமும் கொண்டது என்பதைப் படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. சுமார் லட்சம் கிலோ எடைகொண்ட ஒரு நீலத்திமிங்கிலத்தின் குழந்தை பிறக்கும்போதே 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருக்குமாம்!அஞ்சாலை போன்ற பெரிய மீன்கள் தங்களின் பற்களைச் சுத்தம் செய்வதற்காகச் சிறிய மீன்களை வாய்க்குள் செல்ல அனுமதிக்கின்றன. இவ்வாறு சுத்தம் செய்யும் மீன்களை அவை உணவாக்கிக்கொள்வதில்லை. சிறிய மீன்களுக்குச் சுத்தம் செய்யும் துணுக்குகளே உணவு. இப்படிப் பெரிய மீன்களுக்கும் சிறிய மீன்களுக்கும் இருக்கும் புரிதல் ஆச்சரியம் அளிக்கிறது. ஒரு திமிங்கிலம் இறந்து போனால், சில வகை உயிரினங்கள் அந்தச் சதைப் பகுதியை மட்டும் சாப்பிட்டு முடிக்கவே 18 மாதங்கள் ஆகுமாம்! இவை போன்று ஏராளமான அதிசயங்களை இந்தப் புத்தகம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Related Books

சிறகை விரி... உலகை அறி!

இலங்கை முதல் அமெரிக்காவரை 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். காமதேனு மின்னிதழில், ‘சிறகை விரி... உலகை அறி’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்த கட்டுரைகளுக்கு கிடைத்த பரவலான வரவேற்புக்கு பிறகு அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் முதல் பாகமாக, ‘மண்ணுக்குள் அரண்மனையும் மரண ரயில் பாதையும்’ என்ற தலைப்பிட்ட புத்தகத்தை அண்மையில் வெளியிட்டோம். அதன் இரண்டாம் பாகமாக இந்நூலை வெளியிடுகிறோம். நிச்சயம் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் வாசகர்களை அந்த நாட்டிற்கே கைபிடித்து அழைத்துச் செல்லும். இதுவரை பயணம் செய்வதில் ஆர்வம் கொள்ளாதவர் மனத்திலும் ஆசை துளிர்க்கச் செய்யும். ஒவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்கள், அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள், சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் உள்ளிட்டவை குறித்து அழகிய புகைப்படங்களுடன் கூடிய அருமையான பயண வழிகாட்டி இப்புத்தகம்.

பணம் காய்ச்சி மனம்

பணம் என்பதை நம் திறனுடனோ, நாம் பார்க்கும் வேலையின் இயல்புடனோ மட்டும் சுருக்கிவிட முடியாது. வாழ்க்கையை நாம் அணுகும் போக்குடனும், நம் மனநிலையுடனும் தொடர்புடைய ஒன்று அது. ஆயிரங்களில் சம்பாதிப்பவர் கடனின்றி வாழ்வதும், கோடிகளில் சம்பாதிப்பவர் கடனில் சிக்கி உழல்வதும் உணர்த்தும் சேதியும் இதுவே. இந்த நுண்ணிய கருத்தியலைத்தான் இந்நூலில் நாம் அனைவரும் எளிதில் புரியும்விதமாக ஆசிரியர் விளக்கியிருக்கிறார். நூலாசிரியர் அடிப்படையில் ஓர் உளவியல் நிபுணர் என்பதால், பணம் ஈட்டுவதையும், ஈட்டியதைச் சேமிப்பதையும் அவர் உளவியல் ரீதியாக அணுகியிருக்கிறார். இந்த அணுகுமுறையே பணம் ஈட்டுவது தொடர்பான பிற நூல்களிலிருந்து இந்நூலை வேறுபடுத்திக் காட்டுகிறது. பணம் ஈட்டுவதற்குப் பொருளாதார அறிவு மட்டும் போதாது; வாழ்வியல் பாடங்களும் பணம் குறித்த உளவியல் புரிதலும் அவசியம் தேவை என்பதை ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக நமக்கு உணர்த்துகிறார். பணத்தைச் சம்பாதிக்கவும், இருப்பதைச் சேமிக்கவும், இருக்கும் கடனை அடைக்கவும், வரவுக்கு ஏற்ப செலவுகளைத் திட்டமிடவும், முதலீடுகள் செய்யவும், பிடித்த வேலையில் ஈடுபடவும், விரும்பும் தொழிலைத் தொடங்கவும், நிறைவுடன் வாழவும் நமக்குத் தேவைப்படும் திடமான வழிமுறைகள் இந்நூலில் மிகுந்துள்ளன; அவை நேர்த்தியாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒன்றில் இரண்டு

ஓர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் இரு தெய்விக அற்புதங்கள், இரு தத்துவங்கள் என்னும் பொருளில் ஆலயங்களை அணுகும் புதிய முயற்சி ஜி.எஸ்.எஸ்ஸின் கட்டுரைகளில் வெளிப்படும். அதில் பொதிந்திருக்கும் உண்மை, தத்துவம் உங்களை ஆச்சரியப்படுத்தும். இன்னமும் பக்தியின் மீதான பற்றை உங்களுக்குள் வளர்க்கும். ஆலயம் தொடர்பான புராணம், வரலாறு, செவிவழிச் செய்திகள், கர்ண பரம்பரைக் கதைகள், அந்தப் பகுதி மக்களிடையே நிலவும் நம்பிக்கை, கலை, பண்பாட்டு விழுமியங்கள் போன்ற அனைத்தையும் கட்டுரையின் உள்ளடக்கத்தில் கொண்டுவரும் லாகவமான ஜி.எஸ்.எஸ்ஸின் எழுத்துப் பாணியில், ஒரு கட்டுரையில் அனேக கருத்துகளும் மிளிர்கின்றன. சென்னை நகரத்துக்கே காரணப் பெயராக அமைந்த சென்னமல்லீஸ்வரர் - சென்ன கேசவர் ஆலயம், வட சென்னை வியாபாரிகளுக்கெல்லாம் காவல் தெய்வமாக விளங்கும் சின்னக்கடை அம்மன் ஆலயத்தில் அருள்பாலிக்கும் இரு தெய்வத் திருவுருக்கள், திருப்பாற்கடல் திரிமூர்த்தி ஆலயம், தாய்லாந்தின் ப்ரா ப்ரோம் ஆலயம் என ஒவ்வொரு ஆலயத்திற்குள்ளும் உறைந்திருக்கும் இரு அதிசயங்கள் படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.

0
Help & Support