உலகின் அனைத்து வளங்களுக்கும் மூல ஊற்றாக விளங்குவது இயற்கை. அந்த இயற்கையைப் புரிந்துகொள்ளும் தேடலே அறிவியல். இயற்கையின் மடியில் எண்ணற்ற அறிவியல் கோட்பாடுகள் புதைந்துகிடக்கின்றன. பரவலாக அறியப்படாத அத்தகைய சுவையான அறிவியல் கோட்பாடுகளைத் தேடித்தேடி இந்நூலில் எழுதியிருக்கிறார் ஜோசப் பிரபாகர். இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் எனப் பல்வேறு பிரிவுகளாக இயங்கினாலும், அனைத்து அறிவியல் துறைகளின் இலக்கும் இயற்கையின் பேரமைப்பையும் அதன் சூட்சுமத்தையும் கண்டறிவதுதான். இயற்கையின் வியத்தகு ரகசியங்களை இந்நூலில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் வழியே வாசகர்கள் அறிந்துகொள்ளலாம்.