வெற்றிடத்தை நிரப்பும் வெற்றிக் கதைகள்:
கேட்டதெல்லாம் கிடைக்கும் சூழலில் இன்று பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் வளர்க்கப்படுவதால் சிறிய பின்னடைவுகூட அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.
வெற்றியைத் தலைக்கோ, தோல்வியை மனத்துக்கோ கடத்தக்கூடாது என்று அத்தகைய சந்தர்ப்பங்களில் குழந்தைகளிடம் சொல்லிப் பயனில்லை. வருமுன் காப்போமாக, ஆளுமை வளர்ச்சியில் உள்ள வெற்றிடத்தை நிரப்பும் முன் தயாரிப்பு தேவை. அத்தகைய சீரிய முயற்சியே இந்நூல். இன்றைய மாணவர்களிடத்தில் தோல்வியைக் கண்டு அஞ்சாத மனப்பக்குவம், விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, விமர்சனங்களை எதிர்கொள்ளும் துணிச்சல், எல்லாவற்றையும் பகுத்து ஆராயும் திறன், சமூகப் பொறுப்புணர்வு போன்ற நற்பண்புகளை 28 பேராளுமைகளின் வாழ்க்கைச் சம்பவங்களின் ஊடாகக் கடத்துகிறார் ஆசிரியர்...