
தண்டிக்கப்பட்ட விஞ்ஞானிகள்
இன்று நாம் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு அறிவியல் உண்மையும், ஏதோ ஒரு காலத்தில் பழமைவாதம், மதக் கோட்பாடுகள், அதிகார மமதை மற்றும் சக விஞ்ஞானிகளின் அறியாமை ஆகியவற்றை எதிர்த்து நின்று பெற்ற வெற்றியாகும். பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னதற்காக ஆயுள் முழுவதும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட கலிலியோ, பிரபஞ்சம் முடிவற்றது என்று பிரகடனப்படுத்தியதற்காக நாவறுக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்ட ஜியோர்டானோ புருனோ, பிரசவத்தின்போது மருத்துவர்கள் கை கழுவ வேண்டும் என்று கூறி நோய்த்தொற்றைத் தடுக்க முயன்றதற்காக மனநலக் காப்பகத்தில் அடைக்கப்பட்டு உயிர் துறந்த இக்னாஸ் செம்மல்வைஸ், மனித குலத்தின் கணினி அறிவியலுக்கு அடித்தளமிட்டும் சமூகத்தின் குறுகிய மனப்பான்மையால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட ஆலன் டூரிங் என இந்த நூலில் இடம்பெற்றுள்ள 42 விஞ்ஞானிகளின் வாழ்க்கையும் ஒரு காவியச் சரித்திரமாகும்.
சி. ராமலிங்கம் அவர்கள் எழுதியுள்ள ‘தண்டிக்கப்பட்ட விஞ்ஞானிகள்’ எனும் இந்நூல், வெறும் அறிவியல் வரலாற்று ஆவணம் மட்டுமல்ல; மனித நாகரிகம் தனது அறியாமையால் செய்த வரலாற்றுப் பிழைகளின் சாட்சியமும் கூட. அலெக்சாண்ட்ரியாவின் ஹைபதியா தொடங்கி, நவீன வேதியியலின் தந்தை லாவோசியர், டார்வின், சந்திரசேகர் வரை, தங்கள் காலத்தின் மரபுகளையும் அதிகார அமைப்புகளையும் கேள்வி கேட்டு உண்மையை உரக்கச் சொன்ன பேரறிஞர்களின் வாழ்வியலையும் தியாகத்தையும், மிகக் கடுமையான உழைப்போடும் விரிவான தரவுகளோடும் உணர்ச்சிமிக்க எளிய தமிழில் ஆசிரியர், வாசகர்களுக்கு விவரித்துள்ளார்.
