நினைவுகள் என்பவை வெறும் கடந்த காலத்தின் எச்சங்கள் அல்ல; அவை நிகழ்காலத்துக்குச் சுவை சேர்க்கும் உப்பு. கடந்த காலத்தை அசைபோடாத மனிதர் யாருமில்லை. ஆனால், அந்த நினைவுகளை மொழியில் வடித்து, காலத்தின் சாட்சியங்களாக மாற்றுபவர்கள் ஒரு சிலரே. கலாப்ரியா அந்த அரிய பரம்பரையைச் சேர்ந்தவர்.
எப்போதோ நடந்த ஒரு சிறு நிகழ்வை, ஒரு வாசனையை, ஒரு குரலை, ஒரு பார்வையை மனதின் மூலையிலிருந்து தோண்டியெடுத்து, அதைச் சுற்றித் தகவல்களையும் சித்திரங்களையும் பின்னி, வாசகரின் முன் உயிர்ப்பித்து வைக்கும் அவரது எழுத்து பிரமிப்பூட்டுகிறது!