ஒரு காலத்தில் அந்நியமாகப் பார்க்கப்பட்டவை இன்று தவிர்க்க முடியதவையாக ஆகிவிட்டன. கட்டமைக்கப்பட்டு, கட்டாயமாக்கப்பட்டவை யாவும் கால வெள்ளத்தில் காலாவதியாகிவிட்டன. வதைகளைக் கையளித்தவர்களை வராலாறு அடையாளம் காட்டுவதோடு அதிலிருந்து மீள்வதற்கான பாதையையும் குறிப்பால் உணர்த்துகிறது. ஆனால், இவை எதுவும் இயல்பாக நடந்தேறிவிடவில்லை. அவற்றை எற்றுக்கொள்ளும் வகையில், சமூகத்தைப் பண்படுத்தியவர்களின் போராட்டமில்லாமல் இந்த மாற்றங்கள் சாத்தியமாகியிருக்காது. அப்படியான மாற்றங்களுக்கு வித்திட்ட வீரப்பெண்களைத்தான் ‘பெண் எனும் போர்வாள்’ காட்டுகிறது.