திரு. வெ. இறையன்பு அவர்களின் அணிந்துரையில்..
ஆயிஷா நடராசன் தேர்ந்தெடுத்திருக்கின்ற ஐம்பது நூல்களுமே மணிமணியானவை. இந்த நூல்களை ஒரு கோடை காலத்தில் ஒவ்வோர் ஆசிரியரையும் ஒன்று வீதம் நன்றாகப் படிக்க வைத்து கோடை முடிந்ததும் அவர்களை ஆசிரியர்கள் மத்தியில் அவற்றின் சாரத்தைத் தொகுத்துக் கொடுக்கும்படி பணித்தால் மிகப் பெரிய புரிதல் கல்வி குறித்து ஏற்படும் என்று நான் கருதுகிறேன். இந்த நூல்களையெல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டாயம் வாங்கி வைப்பது முக்கியம். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கல்வி குறித்து மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகளையெல்லாம் அறிந்துகொள்கிறபோது நம்மையுமறியாமல் நாம் கற்றுக்கொடுக்கின்ற நடைமுறை பரிணாம வளர்ச்சி பெற்றுவிடும். ஆழ்மனத்திற்குள் அது வேர்விட்டு மேல்மனத்தில் பூப்பூக்கும் அதிசயம் தானாக நிகழும். அதுவே இந்த நூலின் தலையாய நோக்கம்.