மாறிவரும் நவீன வாழ்வியல் சூழலில், உடலையும் மனதையும் ஆரோக்கியமாகப் பேணுவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. நோய் வந்த பின் தேடி ஓடும் மருந்தை விட, நோய் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை வாழ்வியலே மெய்யான ஆரோக்கியத்துக்கு ஒரே வழி. அதனைத் தமிழ்ச் சமூகத்துக்கு உணர்த்தும் உயரிய நோக்கோடு இப்புத்தகத்தை வழங்குவதில் ‘இந்து தமிழ் திசை’ பெருமிதம் கொள்கிறது.
பிரபல சித்த மருத்துவர் டாக்டர் வி.விக்ரம்குமார் எழுதியுள்ள இந்நூல், நமது தொன்மையான சித்த மருத்துவ அறிவியல் தத்துவங்களை அன்றாட வாழ்வியலோடு எளிமையாகப் பிணைக்கிறது. அதிகாலை விழிப்பு, தூக்கத்தின் இன்றியமையாமை, உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் மன அமைதி என வாழ்வின் ஒவ்வொரு கூறுகளையும் சுவையோடும் அறிவியல் ஆதாரங்களோடும் அலசுகிறது. இன்றைய தலைமுறையினரை அச்சுறுத்தும் மன அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை போன்ற பாதிப்புகளுக்கு எளிய, இயற்கை சார்ந்த தீர்வுகளை முன்வைப்பதே இந்நூலின் சிறப்பம்சமாகும்.